தாராபுரம் சுருணிமகன்
தாராபுரம் சுருணிமகன்
இவர் 36 ஆண்டுகளாக தமிழாசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பள்ளிப் பருவத்தில் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு சீனியர் சாம்பியன், ஜூனியர் சாம்பியன் கோப்பைகளைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் வெளிவரும் எல்லா பத்திரிகைகளும் தன்னம்பிக்கை,கட்டுரைகள், ஆன்மீக கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், சிறுகதைகள்,சிறுவர் சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கவிதைகள் நாடகங்கள், விளையாட்டைப் பற்றிய கட்டுரைகள் எழுதி வருகிறார்.
.பல கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
தாராபுரத்தில் உள்ள மாரியம்மன் சேவா சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் இவர் அரசினர் பதிவு பெற்ற சித்த,ஹோமியோபதி மருத்துவர் ஆவார்.