கவிஞர் ச.தோ. அந்தோணிசாமி தமிழ்மாறன்
கவிஞர் ச.தோ. அந்தோணிசாமி தமிழ்மாறன்
இவரது இயற்பெயர் எஸ்.டி அந்தோணிசாமி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் நிகழ்வுற்ற இலக்கிய நிகழ்வுகளில் சிறப்புரையாற்றி தமிழ் உணர்வை ஊட்டியவர்.
பல்வேறு பட்டிமன்ற,வழக்காடு மன்றங்களுக்கு நடுவராக இருந்து நிகழ்வுகளைச் சிறப்பித்தவர்.
திருச்சி புது தில்லி வானொலி நிலையங்களில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பலமுறை பேசியுள்ளார்.
பல்வேறு இதழ்களில் மலர்களின் கதை- கட்டுரை- கவிதைகள் எழுதி, பல்வேறு மேடை நாடகங்களை எழுதி இயக்கி நடித்தவர்.