டாக்டர் ச.முருகானந்தன்
டாக்டர் ச.முருகானந்தன்
இவர் ஈழத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.
தற்போது அதற்கு அப்பாலும் தனது எழுத்துப் பணியை விரிவு படுத்தி இருக்கிறார்.
வன்னி மலைகளின் வாழ்வைச் சொல்லும் படைப்பாளியான இவர் அதன் மூலமாக ஈழத்தமிழரின் போர்க்கால அவலங்களைச் சித்தரித்தவர்.
கால் நூற்றாண்டு காலமாக போரின் நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஒரு பிரதேசத்தின் மருத்துவராகவும் படைப்பாளியாகவும் இரு துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திய மனிதநேயர்.
சமூகத்திற்குப் பயன்படும் மருத்துவ விஷயங்களை மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் எழுதி வருகிறார்.