முனைவர் பா.பரிதா நெப்போலியன்
முனைவர் பா.பரிதா நெப்போலியன்
இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பஞ்சலி எனும் கிராமத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வியை கரூர் மாவட்டத்திலும், மேல்நிலைக் கல்வியை திருச்சி மாவட்டத்திலும் நிறைவு செய்தார். மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றிய இவர் ஏதாவது சாதிக்க வேண்டும் எண்ணத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார்.
பி.ஏ ,எம்.ஏ , எம்.பில்... பி.எட்... பி.எச்.டி, செட் என தொடர்ந்து படித்து தகுதி நிலை பெற்றார். படித்த கல்வி மாணவ சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன்…
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறையில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.