கே.பாலசுந்தரி
கே.பாலசுந்தரி
இவர் புதுவை யூனியன் பிரதேசத்தில் திருமலைராயன் பட்டினத்தில் பிறந்தவர்.
எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர்.
ஆனாலும் கல்வி ஒன்றே கனவாக இருந்ததால் 50ஆவது வயதில் தொலைதூரக் கல்வி வாயிலாக வரலாற்றில் முதுகலை பட்டமும், 60 வயதில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்திஜியை" என்ற பட்டயப் படிப்பின் தேர்வு பெற்றார்.
59 - வது வயதில் எழுத்து உலகத்தில் பிரவேசமானார்.
வாரமலர் பெண்கள் மலர் அமுதசுரபி திருக்கோயில் ஞானத் தேடல் கனிமொழி இதழ்களில் இவரது படைப்புகள் வந்துள்ளன.
வாரமலர் அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாவது கதைக்கு ஆறுதல் பரிசு பெற்றவர்.