கே.எஸ்.ரமணா
கே.எஸ்.ரமணா
இவர் இளங்கலை அறிவியலில் பட்டமும், முதுகலை சமூக இயலில் பட்டமும், தொழிலாளர் விதிகள் மற்றும் நிர்வாக விதிகளில் சட்டப் பட்டயமும் பத்திரிகை மற்றும் மக்கள் திறன் தொடர்பில் பட்டயமும் பெற்றவர்.
இளம் வயதில் அரசு பணியில் சேர்ந்து பணிபுரிந்தாலும் இடையிடையே வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றிற்கு நாடகங்கள், கதை, கவிதைகள் தொடர்ந்து எழுதி வந்தார்.
சென்னை மற்றும் கோவை வானொலியில் 10க்கு மேற்பட்ட நாடகங்களும், தொலைக்காட்சி தேன் துளி பகுதியில் சிறுகதைகளும், கணையாழி, தாய், தீபம், சுமங்கலி,கண்கள், வைகறை ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.
ரம்யா என்ற புனைப் பெயரில் இவர் வரைந்த ஓவியங்கள் பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வுக்கு பின் முழு நேர எழுத்தாளராகி நிறைய படைப்புகள் படைத்து வருகிறார்.