முனைவர் கரு.நாகராசன்
முனைவர் கரு.நாகராசன்
இவர் சென்னை குருநானக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்.
இவர் சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், மாநிலத் தொடர்பு அலுவலர், கல்லூரி முதல்வர், டீன்,தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் - செயலர் என பல்வேறு பணிகளை ஆற்றி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ் பேராயத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இதுவரை இவர் எழுதிய 75 நூல்களில் எட்டு நூல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக வைக்கப் பெற்றிருந்தன.
மூன்று நூல்கள் தமிழக அரசின் பரிசைப்பெற்றுள்ளன.
இலக்கியப் பணிகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் விருது, குறள் நெறித் தோன்றல் விருது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.