பேராசிரியர் க.பரந்தாமன்
க.பரந்தாமன்
இவர் 1939 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கீழே மூங்கிலடி என்ற கிராமத்தில் பிறந்தவர்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி. ஊரின் முதல் பட்டதாரி. எம்.ஏ...ஆங்கில இலக்கியத்திலும், எம்.ஏ... சமூகவியலிலும் முதுகலை பட்டம் பெற்றவர்.
ஏறத்தாழ 30 ஆண்டுகள் தமிழக அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பயிற்றுனராக,உதவிப் பேராசிரியராக,பேராசிரியராக, துறைத் தலைவராக துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் ஆங்கில மொழியில் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர் அதற்கு இவரது 100 கவிதைகளின் தொகுப்பே சான்று.