டாக்டர்.எஸ்.தங்கமணி
தமிழறிஞர்.டாக்டர்.எஸ் தங்கமணி
இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரைச் சேர்ந்தவர்.
1965 ஆம் ஆண்டு கல்லூரிப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி திராவிட சிந்தனையில் காலூன்றியவர்.
அரசியல் களத்தில் "திராவிடத் தென்றல்" என்றும் சந்நியாசி என்றும் பாராட்டப்பட்டவர்.
பாரதி- பாரதிதாசன் கவிதைகளை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.
இவர் மனிதநேய கவிஞர், பேச்சாளர்,எழுத்தாளர்,
சமூக சிந்தனையாளர், இலக்கிய ஆர்வலர்.
தமிழக அரசின் "அகவை முதிர்ந்த தமிழறிஞர்" என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.